நல்வரவு_()_


Thursday 28 April 2011

என் வீட்டுத் தோட்டத்தில்:), ரண பீன்ஸ் கறி

இது இலாவின் “கொப்பி லெஃப்ட்” தலைப்பூஊஊஊ.  அ-து, இல்ஸ் சொன்னா இத் தலைப்பில, கிச்சின் படங்கள் இணைத்தது போல, தோட்டப் படங்கள் இணையுங்கோ, “இது என் கொப்பி ரைட் தலைப்பல்ல” என, அப்போ ரைட் இல்லாட்டில், கொப்பி லெஃப்ட் தானே?:). ஐ.. தங்கட தலைப்பைக் களவெடுத்திட்டேன் என ஆரும் சண்டைக்கு வர முடியாதூஊஊஊ:)))  கர்ர்ர்ர்ர்ர்ர்:).

இது 2010 இல், கிச்சின் வாசலில், நான் நட்ட “Runner Beans”. ரீவி யிலே அதிகமாக “கார்டினிங்” என்ற தலைப்பை விரும்பிப் பார்ப்பேன். அப்படிப் பார்த்தபோதுதான், இவ் பீன்ஸ் ஐக் காட்டினார்கள், அதன் பூவின் அழகிலே மயங்கி உடனேயே நானும் வளர்க்கவேணும் என கங்கணம் கட்டி, நட்டு வளர்த்து சமைத்தோம்.









ரண பீன்ஸ் கறி
தே.பொருட்கள்: 
ரண பீன்ஸ் - 250g
உருளைக்கிழங்கு - 150g
வெங்காயம் - 25 g
பூண்டு - 4பற்கள்..
மஞ்சள்தூள் - 1/2 தே.க
கரம்மசாலா தூள் - 1/2 தே.க
பால் - 100 ml
உப்பு - 1 தே.க
எண்ணெய் - 2 மே.க
கறிவேப்பிலை - 1நெட்டு
தண்ணீர் -150 ml
எலுமிச்சை - 3 தேக்கரண்டி.

செய்முறை..

பீன்ஸ்சை சிறு துண்டுகளாக வெட்டவும். வெங்காயம், கிழங்கையும் பூண்டையும் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.


அடுப்பிலே பாத்திரத்தை வைத்து, எண்ணெய் விட்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.

பீன்ஸ், கிழங்கு, உள்ளி, உப்பு போட்டு பிரட்டவும்.

கொடுத்த அளவு தண்ணீர் விட்டு, மூடி அவியவிடவும்.

அவிந்து வந்ததும் மஞ்சள்தூள்  போட்டுப் பிரட்டவும்.

பின்னர் பால், கரம்மசாலா, கறிவேப்பிலை போட்டுப் பிரட்டவும்.

நன்கு பிரட்டலானதும், இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
                                           இலகுவான, சுவையான பீன்ஸ் கறி தயார். 
000000000000000000000000000000000000000000000000000
இவர் கியூ...கம்பர்...
பூத்தார்... ஆனா
காய்க்கவில்லை:((


இவை மண்ணில் வைத்தால் வளராதென சாடியில் வைத்தேன், கீழே கார்டினில் வைத்த ஏனையவை, இன்னொரு நாளில் மூடு:) வரும்போது வேறொரு பதிவாக வரும்.
0000000000000000000000000000000000000000000000000

குட்டி இணைப்பு:):-
தத்துவம் மக்களஸ்ஸ் தத்துவம்......

தம்பி ஜீனோ, இப்படங்களை கொசு மயிலுக்கு அனுப்பியிருந்தார், படத்தை வைத்து நான் ஒரு “உலக தத்துவத்தையே” உருவாக்கிட்டேன்:):

அதாவது, அக்கா எலிபிடிப்பதற்கு, தம்பி ஜெல்ப் பண்றார்:)



அக்காவுக்குக் ஹெல்ப் பண்ணினதால:),
தம்பியை ஒருவர் தலையிலயே தூக்கிட்டுப் போறார்:)
முடிவு என்னன்னா....
அடுத்தவருக்கு நாம், மனம் வைத்து உதவினால்,
நாங்க உதவினவராலதான் என்றில்லை,
யாரால ஆயினும், எமக்கு அப்பலன் கிடைக்கும்ம்ம்ம்ம்ம்ம்.

==========================================================
 “மூத்தோர் சொல் வார்த்தையெல்லாம்
முன்னர் பொய்யாகும்,
காலம் வந்து பாடம் சொன்னால்
பின்னர் மெய்யாகும்”
==========================================================


Saturday 23 April 2011

யோசிச்சூஊ.. யோசிச்சுத்தான் வாறாங்க... சே..சே.. தாறாங்க..:))

இது ஆசியா தந்த ஸ்ஸ்ஸ்ஸ்:))



இதூஊஊஊஊ அப்ஷரா தந்த ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))



இதூஊஊஊஊ ஜல்..ஜல்.. ஜலீலாக்கா தந்த ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))



அவோட்.. தந்த மூவருக்கும் நன்றி... அதுக்காக.. நேற்று உங்களுக்காக ஒரு கொத்து பூக்கள்... பூக்களைப் பறிக்கக்கூடாது:), அதனால மரத்தில வைத்தே...



இதுதான் மரம்...

இப்போ பூக்கள் எல்லாம் வரத் தொடங்கிவிட்டன... போனவருட இதே மலர்கள் பார்க்க.... இங்கே வாங்க..

========================================================

சரி சரி தெரிஞ்சோ தெரியாமலோ உள்ளே வந்திட்டீங்க:)... எனக்குப் பிடித்த இதை, நீங்களும் படிச்சிட்டுப் போய்வாங்கோ..

உன் பழைய கடிதங்கள்...

வீட்டுச் சுவர்கள் வெள்ளை
பூசிக்கொண்டபோது
பரண்மீது தூங்கிக்கொண்டிருந்த
பழைய புத்தக மூட்டை
பார்வைக்கு வந்தது...


வசீகர இளமையின்
வாசல் படிகளில்
அமர்ந்தபடி நீ எழுதிய
காதல் கடிதங்களின் கட்டு
என் கைக்குக் கிடைத்தது...

தானிய மணிகளின் நடுவில்
ஒரு தங்கமணிமாதிரி
எத்தனைமுறை படித்தாலும்
அலுத்துப் போகாத
உன் எழுத்துக்கள்
கண்ணீரில் தொட்டு
நீ போட்ட கை எழுத்துக்கள்...


எனக்கே மறந்துபோகும்
என் பிறந்த நாளிற்கு
மறவாமல் நீ அனுப்பி வைத்த
வாழ்த்து மடல்கள்...


பதினாறும் நிரம்பாத
பருவத்தில், விரல்களையே
மீட்டிவிடும் வீணையாய்
உனக்கு நீயே கட்டிக்கொண்ட
பிரமிட்டுக்கள் - ஓ
உன் கடிதங்கள்...


காதலன் என்கிற கர்வத்தோடு
அவற்றை வாசித்த
காலங்களுண்டு இப்போதோ
குற்றவாளியைப்போல
குறுகுறுத்துப் போகிறேன்...


நீ வரைந்த கடிதங்கள்
நெஞ்சில் அறைந்த கடிதங்கள்!!!!
(இது கவிஞர் வைரமுத்துவின் கவி என நினைக்கிறேன், எப்பவோ படித்தேன், பெரிதாக இருந்தது, சுருக்கி எழுதி வைத்திருந்தேன் பொக்கிசமாக).

 


பின் இணைப்பு:
(பிடிச்சிருந்துது)



அம்மா வயிற்றில் சுமந்தா
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தாள்
நண்பா!!  நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல!!!

===========================================
புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை
===========================================
 
 
ஒரு குட்டி இணைப்பூஊஊ
அது டோக் இல்ல ஜீனோ, “ஹப்பி சண்டே”
 
==================================================

Sunday 17 April 2011

எனக்குத் தெரியும்:)... எனக்குத் தெரியும்:)..

எல்லோரும் முறைப்பீங்க என் கவித:) பார்த்து என எனக்கு நல்லாவே தெரியும்... அதுக்காக நானே என் கைப்பட, என் ஒரே ஒரு கிட்னியைப் பாவித்து எழுதிய “அருமந்த கவிதையை” , என் பக்கத்தில நானே போடத் தயங்கினால்...

அதைவாங்கி ஸாதிகா அக்கா போடுவாவா?, இல்ல ஜலீலாக்கா போடுவாவா?, இல்ல இமா போடுவாவா? இல்ல ஆசியாதான் போட்டிடுவாவா தன் பக்கத்தில, அதுவுமில்லாட்டில் இடிச்சு இடிச்சு பக்கத்திலயே ஒட்டிக்கொண்டிருந்தாலும் இலா தான் போட்டிடுவாவா?.. போனாப்போகுதென வான்ஸ்ஸ் கொண்டுபோய் போட்டிடுவாவோ? இல்ல இன்னும் எல் போர்ட்டாகவே இருக்கிறமே இக்கவிதையைப் போட்டாவது பாஷாகிடுவமே என சந்துதான் தூக்கிப்போய் போட்டிடுவாவோ?:))).

யாருமே போடமாட்டாங்க:((, சோ... நான் போட்டேதான் ஆகவேணும்... ஏன் எண்டால் இது முளுக்க முளுக்க என் உழைப்பாச்சே....

உஸ் முறைக்காதீங்க... இப்ப என்ன காலம்? காலத்துக்கேற்றபடி சிந்திக்கத் தெரியோணும் என்னைப்போல.... அதைவிட்டுப்போட்டு முறைக்கப்பிடா.... எனக்குத் தெரியும் பின்னூட்டம் போடமாட்டீங்க ஆரும் என.. சரி சரி படிச்சிட்டாவது போங்க மக்காள்ஸ்ஸ்ஸ்..

=====================================================

இளவேனிற்காலம்

இவை சுடச்சுட எடுத்த படங்களே...

புற்றாலே புறப்பட்ட
ஈசல்களாக
பார்க்குமிடமெல்லாம்
மக்கள் கூட்டம்!!

ஆடையின்றி இருந்த
பசுமரங்களெல்லாம்
பச்சை இலைகளையும்
பலவர்ணப் பூக்களையும்
கொண்டு - தம்
மானத்தை மறைக்க
முயல்கின்றன!!

வெறிச்சோடியிருந்த
"பார்க்"குகளெல்லாம்
குழந்தைகளின்
குதூகலத்தைக் கண்டு
புத்துயிர் பெறுகின்றன!!

அரையும் குறையுமாக
இருந்த குப்பைத்
தொட்டிகளெல்லாம்
நிரம்பி வழிகின்றன - வீடுகள்
சுத்தப்படுத்தப்படுவதால்!!

இறந்து விடுவோமா
என பனிக்கட்டிக்குள்ளே
ஏங்கிக்கிடந்த - புல்
வேர்களெல்லாம்
விட்டோமா பாரென
விட்டத்தைப் பார்த்துப்
பசும்தரையாகின்றன!!



இருட்டையும் குளிரையுமே
கண்டு விறைத்திருந்த
கண்களெல்லாம் 
வெளிச்சத்தைக்
கண்ட நாணத்தில்
கறுப்புக்கண்ணாடியைத்
தேடுகின்றன -தம்மை
மறைத்துக்கொள்ள!!






நீயின்றி நானில்லை -என
ஒட்டி உறவாடிய
குளிர்கால அங்கிகளெல்லாம்
சிறிது ஓய்வெடுக்கவென்று
அடிப்பெட்டியிலே
அடைக்கலமாகின்றன!!

காணாத தூரத்திலிருந்த
பறவைகளும் அவற்றின்
அழகிய கூக்குரல்களும்
கண்ணுக்கும் காதுக்கும்
கவிமழையாகின்றன!!



நானும் இதுவரை
போட்டிருந்த என்
முக்காடை நீக்கி,
மெதுவாகப் பார்க்கிறேன்
ஆம் - இளவேனில் காலம்
ஆரம்பித்துவிட்டதை!!

====================================================

ஊசி இணைப்பு:

======================================================
ஆயிரம் தான் சொல்லுங்கள்
 கல்லாய் நடக்கும் மனிதர்களை விட
 கல்லாய் கிடக்கும் கல்
மேன்மையானதே
======================================================

Tuesday 12 April 2011

பிக்கி பாஃங்::::::

அதாவது.... குட்டி குட்டியாக நான் சேமித்து வைத்திருக்கும்.... சில குட்டிக் கவிதைகள்...


என்னைத் தேடிய
புற்றே.. - நான்
இங்கிருக்கிறேன்
அம்மாவின்
கருவறையை
விட்டுவிடு
/////////////////////////////



அவளுக்கு
வசதியாய் வாழும்
கனவு வந்ததில்லை
வறுமையையே
அவள் வசதியாக
நினைப்பதனால்..
/////////////////////////////
 

பட்டங்கள்..

உன்னை நினைத்தே
தூங்குவதால் சோம்பேறி!
உன்னைப்பற்றி மட்டுமே
உளறுவதால் பைத்தியம்!
உன்னைத் தேடி ஊர் முழுதும்
சுற்றுவதால் போக்கிரி!
பெண்ணே உன்னால்
எனக்கு எத்தனை பட்டங்கள்!!!
///////////////////////////////////////


விளக்குகள்


எரியவும் எரிக்கவும்
எங்களுக்கும் தெரிகிறது 
ஆனால் உங்களைப்போல
ஒளிகொடுக்க மட்டும்
தெரியவில்லையே..

===========================

இராத்திரி ரகசியங்களுக்கு
நீங்கள் சாட்சிகளாக
இருப்பதால்தான்
விடிந்ததும் உங்கள்
நாவுகள் துண்டிக்கப்பட்டு
விடுகின்றன..

===========================

விளக்கு சுடும்
என்பதை அறிந்து
எந்தப் பூச்சியும்
அதில் விழுவதில்லை
ஆனால் - பூச்சி
தவறுதலாக
விழுந்துவிட்டதே என
விளக்கு சுடாமல்
விடுவதுமில்லை
/////////////////////////////////////////////////////////



எனக்கொரு
கடிதமெழுது - என்னை
விரும்புகிறாய் என்றல்ல
வேறு எவரையும்
விரும்பவில்லை
என்றாவது எழுது!
£££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££

கேக்குதோ??? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) காது மட்டும்தான் பெரிசே தவிர, நான் எப்பூடிக் கூப்பிட்டாலும் கேட்குதேயில்லை:((((((

£££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££

இது நெட்டில் தான் படித்தேன், மிகவும் பிடித்துப் போன கவிதை...(பெரிதாக்கிப் படியுங்கள்)



#########################################################

பின் இணைப்பு:)

இது ரொம்பாஆஆஆஆ ஓவர்...:))))


##########################################################

Monday 4 April 2011

என் எழுத்து:)



பெண் எழுத்து அதுதானே “என் எழுத்து”.

முதலில் என்னை “பெண் எழுத்து” எனும் தொடருக்கு... “ஹைலைட்ல” அழைத்த வானதிக்கு நன்றி(கர்ர்ர்ர்ர்:)) சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.

என்னை தெரிஞ்சோ தெரியாமலோ அழைத்துவிட்டீங்க, இனி என் அலட்டலை எல்லாம் பொறுமையோடு கேளுங்க.

“பெண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” .. இது ஒளவையார் சொன்னது(யாரும் குறுக்க பேசிடக்கூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:))

இதைவிட வேறென்ன வேணும் பெண்ணெழுத்திப் பற்றி பெருமையாக சொல்லுவதுக்கு.



இந்த மசாஜ் போதுமா?:))))

ஒவ்வொரு பெண்ணின் எழுத்துக்கும் பின்னால் ஒரு ஆண்தான் உறுதுணையாக இருக்கிறார். வலைப்பூக்களை எடுத்துக்கொண்டாலே திருமணமான பெண்கள்தானே அதிகம் வலைப்பூவில் எழுதுகிறார்கள்(நானறிந்து). அவர்களின் ஊக்கத்துக்கு கணவர்தானே காரணம். என்னைப்பொறுத்து பப்ளிக்கில் கதைக்கவே எனக்கு பயம், ஒவ்வொரு விஷயத்தையும் கணவரோடு பகிர்ந்து பகிர்ந்துதான் என் தன்னம்பிக்கையை வளர்த்து.... வலைப்பூவை இதுவரை ஓட்டிவந்திருக்கிறேன். யார் என்ன பதில் போட்டாலும், என் கணவர் ஒரு வார்த்தை “நீங்கள் எழுதியிருக்கும் விதம் நன்றாக இருக்கு” எனச் சொல்லிவிட்டாலே எனக்கு போதும், மனம் சோராது.

சரி விஷயத்துக்கு வருவோம். நான் ஓடி ஓடி நிறையப் பேரிடம் கேட்டுவிட்டேன்.. அனைவரும் சொல்கிறார்கள்... பெண் எழுதினால் அது பெண் எழுத்துதானே என. அதைத்தானே நான் தினமும் எழுதிக்கொண்டிருக்கிறேன் அதையும் மீறி பெண் எழுத்துப் பற்றிக் கேட்டால் நான் எங்கே போவேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.

எந்த ஒரு நல்ல விஷயத்தையும் எவர் ஒருவர் அழகாக வெளிப்படுத்துகிறாரோ.. அது பாராட்டப்படவேண்டியதே, இதில் பெண் என்ன ஆண் என்ன? எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. பெண்ணின் எழுத்துக்கு வரையறை இருக்கு என்கிறார்கள், இந்த வரையறையைக் கொண்டுவந்தது யார்? எதிலாவது சட்டம் தீட்டப்பட்டிருக்கோ?. பெண்ணுக்கு மட்டுமல்ல, பப்ளிக்கில் எழுதும் ஒவ்வொருவருக்கும் வரையறை வேண்டும், இதில் பெண்ணை மட்டும் குறிப்பிட என்ன இருக்கு.

பெண் உடைக்கு வரையறை, ஒழுக்கத்துக்கு வரையறை... இதையெல்லாம் நம்மவர்தான் கொண்டுவந்தார்கள், சரி அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பெண் எழுத்துக்கு வரையறை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

அதாவது ஒரு கதை படிக்கிறோம்.. அதை யார் எழுதியது என்பதனைத் தெரிந்துகொண்டு படிப்பதற்கும், தெரியாமல் படிப்பதற்கும் மனதளவில் நிறைய வேறுபாடு இருக்கிறது. எம் மனம்தான் அனைத்துக்கும் காரணம்.

 சமீபத்திலே, ரீவியிலே ஒரு பேட்டி நிகழ்ச்சியில் ஒருவர் கலந்து கொண்டார். அவர் வலைப்பூக்கள் பற்றி நிறைய விஷயங்கள் சொன்னார். அதில் அவர் சொன்னது. யாரும் வலைப்பூ ஆரம்பிக்கலாம், அது ஒரு பெரிய விஷயமே இல்லை, அதுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது, ஏனெனில் அது அவரவர்க்கு சொந்தமானதே. அதில் அவர் எதையும் எழுதலாம், ஆனால் ஆரம்பத்தில் எப்படி எழுதுவது எதை எழுதக்கூடாது என்றெல்லாம் புரியாது, சிலகாலம் போக, தாமாகவே புரிந்துகொண்டு, தமக்கென ஒரு வரையறையை உருவாக்கிக் கொள்வார்கள்.. அதாவது அடுத்தவரை தாக்கிடாமல், அடுத்தவர் மனம் புண்படாமல் எழுதப்பழகிடுவார்கள் என்று சொன்னார்.

அது உண்மையே, வரையறை என்பது இருபாலாருக்கும் பொதுவான ஒன்றென்பதுதான் என் கருத்து. ஒவ்வொருவருக்கும் என ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது, ஒரு நிகழ்வை வெளிப்படுத்தும் விதம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.

உதாரணமாக ஒரு பூனை மரத்திலே இருந்ததைப் பார்த்துவிட்டு வந்து, அதைப்பார்த்த விதத்தை ஒருவர் கையை அசைத்துக்காட்டிச் சொல்வார், இன்னொருவர் கண்ணையும் விரித்து கையையும் ஆட்டிக்காட்டிச் சொல்வார், இன்னொருவர் உடல் அங்கம் அனைத்தையுமே அசைத்துச் சொல்வார், இன்னொருவர் ஆடாமல் அசையாமல் சொல்வார்... இப்படிப் பலவகை உண்டு. இப்படித்தான் பெண் எழுத்தும்... ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்....

அதேபோல, அதை ரசிப்பவர்களுக்கும் தம் ரசனைக்கேற்ப ஒவ்வொருவிதம் பிடிக்கும். ஒவ்வொரு பெண்ணின் எழுத்து நடையும் ஒவ்வொரு விதமாக(ஸ்டைலாக) இருக்கும், அதனை மாற்ற முடியாது.... முடிவு என்னவென்றால்..... “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”.

நான் எப்பவுமே எதையுமே தப்பான கண்ணோட்டத்தில் படிப்பது மிக மிகக் குறைவு, எதுவாயினும் எனக்கு சாதகமாக மாத்திப் படிப்பதுதான் வழக்கம். அதிலும் சமீபத்திலே ஒரு பதிவில் ஜெய்... சொன்னார் “மாத்தி யோசியுங்க” என, அதுவும் ஆழமாக மனதில் பதிஞ்சுபோச்ச்ச்ச்ச்.. இப்போ பலதையும் மாத்திமாத்தி யோசிக்கிறேன். (தப்பாக அல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

யாம் பெற்ற இன்பம் பெறவேண்டாமோ இவ் வையகம்.... அதுக்காகத்தானே நான் அழைக்கிறேன்....

ஜலீலாக்கா, இமா, இலா, சந்தனா.
ஃபோர் எ சேஞ்..... ஜெய்...(100 உடன் 101 ஆக உங்கட எழுதாமவிட்ட லிஸ்ட்ல இதையும் சேர்த்திடுங்க அவ்வ்வ்வ்வ்வ்).

ஐவரையும் அழைத்திருக்கிறேன்..... எழுதினால் சந்தோஷம், எழுதாதுவிட்டால் அதைவிட சந்தோஷமா?:)) எனக் கேட்டிடாதீங்க கர்ர்ர்ர்ர்ர்.... நான் எதுக்கும் கோபிக்கப்போறதில்லை. இதென்ன பணத்துக்காகவா தொடர்ப்பதிவு நடத்துகிறோம்.... ஒரு மகிழ்ச்சி, பொழுது போக்கிற்காகத்தானே.... இதில் கோபித்து முகம் சுழிக்க என்ன இருக்கிறது, தலைப்பு பிடித்திருந்தால், உங்களால் எழுதமுடிந்தால் எழுதுங்கோ.

=========================================================
இது அன்புத் தம்பி ஜீனோ, அக்கா அடிக்கடி கர்ர்ர்ர்ர் சொல்லிச்சொல்லி பல்லுப் பழுதாகியிருக்குமாம் என புதிதாக ஒரு பல்செட் அனுப்பியிருக்கிறார்.... வைரம் பதித்தது.... இப்ப நான் இதோடுதான் திரிகிறேன்....:) (தம்பிக்கு அக்காவில் இருக்கும் அக்கறை, வேற ஆருக்குமே இல்ல:)).


============================================================================
இல்ஸ் உம் ஒரு பெரிய கயிறு அமெரிக்காவில இருந்து அனுப்பியிருக்கிறா, ஏதும் பிரித்தானியாவில நிலநடுக்கமென்றால்.... இதைப் பிடிச்சு ஏறி அங்கின வந்திடட்டாம்... நுனியை(கயிற்றின்) அவ இறுக்கமாகப் பிடிச்சிருக்கிறா....

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

ஊசி இணைப்பு:
TODAY A READER TOMORROW A LEADER