நல்வரவு_()_


Sunday 18 March 2018

ஹா ஹா ஹா என்னா முசுப்பாத்தி:) ஒரே பகிடிதான் ஹா ஹா ஹா:)

ஆராவது இண்டைக்குச் சிரிக்காமல் போய் விட முடியுமோ?:)
வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகுமாமே:) ஆனா சிலபேர் சிரிக்கவே பயப்பிடுவினம் கர்ர்ர்ர்:)).. சிரிப்போரையும் முறைச்சுப் பார்த்து சிரிக்க விடாமல் பண்ணுவோரும் உண்டு ஹா ஹா ஹா பன்னி:) பீப்பிள்:))[ஹையோ இது ஃபனி funny:) என்பதை  ஜொன்னேன்:)].

Tuesday 13 March 2018

நூறு வயசுவரை வாழ விருப்பமோ? ஈதர் ஆயியே:)

நீண்ட காலம் வாழோணும் என விருப்பமோ? வாங்கோ வாங்கோ நல்ல வழிமுறைகள் சொல்லித்தாறேன்:)... ஹெல்த்தியா இருக்க என்ன பண்ணோனும், எதை எதை எல்லாம் சாப்பிடோணும்.. என்பன போன்ற பற்பல அட்வைஸ்கள் நெட்டிலும், இதுக்கென புக்ஸ் உம் குவிந்து கிடக்கு:)..

அதனால அரைச்ச மாவையே திருப்பி அரைக்க நான் விரும்பவில்லை:).. நான் இங்கு சொல்லப்போகின்ற விசயமே சற்று மாறுபட்டது:).. அதுக்கு வரமுன், நல்ல விசயம் இரண்டு சொல்லிடுறேன்..

ஒரு 30..35 வயதை அடைந்திட்டால், அனைவரும் மல்ட்டி விட்டமின் பாவிப்பது மிக நல்லது. இதுவரை பாவிக்காதவர்கள் இனி ஆரம்பியுங்கள் நிறைய மாறுதல்கள் உங்களுக்கு தெரியும். உசாராக இருப்பீங்கள். அதிலயும் பிரித்தானியாவில் Boots  எனும் பாமசி இருக்கு, அங்கு கிடைக்கிறது சனரோஜன் மல்ட்டி விட்டமின். இது மிக தரமானது. நீங்கள் ஒன்று விட்ட ஒருநாள், ஒன்று எடுத்தாலே போதும்.  இது 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு என புறிம்பாகவும் கிடைக்கிறது. வெளிநாட்டவர்கள் ஓன் லைனிலும் வாங்கலாம். வேறு Brand லும் கிடைக்கிறது.
இது கூடுதல் நல்லது என்றேன், மற்றும்படி எந்த மல்ட்டி விட்டமினும் நல்லதுதான்.

அடுத்து ஒமேகா 3, ஃபிஸ் ஒயில் பாவிப்பதும் நல்லது. இதில் “ஃபிஸ் லிவர் ஒயில்” என இருக்கிறது, அது தலைமயிர் உதிரும் என்கிறார்கள், அதனால்,  “ஃபிஸ் ஒயில்” தேடி வாங்கிப் பாவியுங்கோ.

உணவுக்கட்டுப்பாடு அளவோடு இருப்பது முக்கியம்.. முடிந்தவரை ஜிம் க்குப் போங்கோ, சுவிமிங் போங்கோ. நடப்பது நல்ல பயிற்சியே ஆனா, நடப்பதோடு ஜிம் க்குப் போனால்தான் தசைகள் இறுகும்... இன்னொன்று ஜிம் போனால் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் நல்ல புத்துணர்ச்சியாக இருக்கும், மனம் உற்சாகமடையும்.

இப்படி இருந்த எங்கள் வீடு.. 

இப்போ இப்பூடி ஆச்சு:)
இதில இருந்து என்ன புரியுது?:).. அதிரா ரொம்ப வயக்கெட்டுப் போயிட்டேன் ரெட்மில் ஓடி எனப் புரிஞ்சிருக்குமே:))


சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்... மட்டருக்கு வருவோம்:).

பிளீஸ் பிளீஸ்.. ஹொட்டா ரெண்டு கரண்டி சீனி போட்டு ஒரு நெஸ்ட்டமோல்ட் குடிச்சுக்கொண்டு மிகுதியை தொடருங்கோ:) நிறைய எழுதி விட்டேன்:))

மனித வாழ்க்கை என்பது நம் கையில் இல்லை. இன்று இருக்கிறோம் நாளை இருப்போம் என்பது நமக்கு தெரியாது. அதனால எப்பவும், எதிலும் ஓவராக இருக்கக்கூடாது.

அதாவது பணம் தேவைதான், அதுக்காக வாழ்க்கையை வாழாமல் பணம் சேர்க்கோணும் என அலையக்கூடாது. சிலர் சேர்த்துச் சேர்த்து வைத்துவிட்டு கண்ணை மூடி விட்டால் அதில் என்ன இருக்கிறது?.. ஆசைப்பட்டதை சாப்பிடோணும், ஆசைப்பட்டதை வாங்கோணும்.. ஓரளவுக்கு சேமிப்பு இருந்தால் போதும்... பிள்ளைகளை நன்கு படிப்பிச்சு விட்டால் போதும், பின்பு பேரப்பிள்ளைக்காகவும் சேர்க்கத் தேவையில்லை.. நாமும் எஞ் சோய் பண்ணோனும்..

ஒருவேளை நமக்கு நாளைக்குச் சா வந்தால்கூட, நன்கு அனுபவித்தார் பறவாயில்லை என நினைக்குமளவுக்கு இருக்கோணும்.  சிலர் இருக்கிறார்கள்.. ஆ அதில் கொலஸ்ரோல் சாப்பிடாதே,  இதில் சுகர், இதில் ஒயில்.. இப்படியே எதற்கும் ஒரு கதை சொல்லிக்கொண்டே இருப்பினம்..

“எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை, எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம்”

அப்படி எல்லாம் பயந்து ஓவர் கொன்றோலா இருந்திடாதீங்கோ.. ஓரளவுக்கு கொன்றோல் இருந்தால் போதும், மற்றபடி ஆசைக்கு என்ன வேணுமெண்டாலும் செய்யுங்கோ. பிள்ளைகள் கேட்பதை வாங்கிக் குடுங்கோ... குழந்தையில் இருந்து ஒவ்வொரு வயதுக்கு ஒவ்வொன்று கேட்பார்கள் வளர வளர..., 5 வயதில் பொம்மை கேட்டால் வாங்கிக் குடுக்காமல், 20 வயதில் குடுப்பதில் என்ன இருக்கு?.. சில குடும்பங்களில் பணம் பணம் என பணமாக வைத்திருப்பினம் ஆனா பிள்ளைகளுக்கு ஆசைக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் குடுக்காயினம், ஒரு கடைச்சாப்பாடு குடுக்காயினம்.. கூடாது கூடாது என தடுப்பினம்... உடுப்புக்கள்கூட ஆசைக்கு வாங்காமல் எங்கே மலிவாக இருக்கு என தேடி வாங்குவது.. இதெல்லாம் எதுக்கு?...

வருத்தம் வராமல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கோணும் தான், அதுக்காக ஓவர் கொன்றோலாக இருக்கக்கூடாது, எப்படி ஆயினும் நம் ஸ்டேசன் வந்திட்டால் இறங்கித்தானே ஆகோணும்.. அது 30 இலும் வரலாம் 50 இலும் வரலாம் 100 உம் ஆகலாம்... இப்போ எத்தனை எத்தனை விசயங்கள் அறிகிறோம்..

எமன் அங்கிள்:) பாசக்கயிற்ரோடு வரும்போது:) ஆஆஆ நான் டயட் பண்ணினேன்:), நான் ஒயில் உணவு சாப்பிடவில்லை.. நான் சரியான ஹெல்த்தியா இருக்கிறேன் இப்போ வரமாட்டேன் எனச் சொல்ல முடியுமோ?:).

எது நம்மை மகிழ்ச்சிப்படுத்துதோ.. எதனால் நாம் சந்தோசம் அடைகிறோமோ அதில் கூடுதல் கவனம் செலுத்தி நம்மை முடிந்தவரை ஹப்பியாக வைத்திருக்கோணும்... கடந்த காலத்தையும் நினைக்கக்கூடாது.. வருங்காலத்தையும் நினைக்கக்கூடாது.. இப்போதையதை நினைத்து ஹப்பியா இருக்கோணும்.

மனம் அதிகம் துன்பப்பட்டால் நம்மை நிறைய வருத்தங்கள் தொற்றிக் கொள்ளும், நம் இதயம் பாதிக்கப்பட்டு விடும், அதனால நம் இதயத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எதையும் நான் செய்யாமல் இருப்பதே மேல். 

சில விசயங்களில் தலையிடாமல் இருப்பது, சிலரோடு சேர்ந்தால் எப்பவுமே மனதுக்கு துன்பம் வந்து விடுகிறது எனில், அதை விட தனியே நிற்பது எவ்வளவோ மேலானது.

நமது சேர்க்கையைப் பொறுத்தே நமக்கு இன்பமும் துன்பமும் , ஏன் மரியாதைகூட அப்படியேதான், ... பன்றியோடு சேர்ந்த பசுவின் கதை போலானால் நமக்கு துன்பமே, அதனால முடிந்தவரை மனதை மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய விசயங்களிலேயே ஒன்றியிருத்தல் நம் உடல் நலத்திற்கு மிக நல்லது. 

நெருப்பு சுடும்....., தண்ணீர் குளிரும்... அதுபோலவே தண்ணீர் போன்றோருடன் உறவை வளர்த்துக் கொண்டால் நம் வாழ்வும் குளிர்ச்சியாக இருக்கும்.

நமக்கு வயதாகிறது இனி என்ன மரணம்தானே என எண்ணக்கூடாது, போய் விட்ட காலம் திரும்ப வரப்போவதில்லை, அதனால அதை எண்ணி வருத்தப்படுவதில் எப்பயனும் இல்லை,  ஆனா இருக்கும் காலத்தை ஆவது மகிழ்வோடு கழிக்க முயற்சிக்கோணும்.

சில விசயங்கள் உண்மையில்லை, அப்படி எதுவுமே இல்லை எனச் சிலர் சொன்னாலும்..
எல்லாம் அவன் செயல்....., இதுவும் கடந்து போகும்..., எல்லாம் விதிப்படியேதான்...  

இப்படியான வார்த்தைகள் சரியோ தப்போ, ஆராட்சி பண்ணாமல் மனதில் அப்பப்ப சொல்லிக்கொண்டால், நம் மனதுக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது, அதன் மூலம் நம் மனது அமைதி பெறுகிறது, மன அமைதி கிடைத்தால் நம் இதயமும் உடலும் பாதுகாக்கப் படுகிறது...

எத்தனை துன்பம் வந்தாலும், மேற் சொன்ன வார்த்தைகளை உபயோகித்துப் பாருங்கள், சின்ன விசயத்துக்கெல்லாம் ஹார்ட் அட்டாக் வருமளவுக்கு யோசிக்காதீர்கள்.

கோபம் பொல்லாத ஒன்று, கோபத்தை அடக்கப் பழகுங்கோ.. நாம் டென்ஷனாகும்போதுதான் கோபம் வருகிறது.. இதனால் பிரசர் அதிகமாகி இதயக் கோளாறும் விரைவில் வந்திடும்.
முடிந்தவரை பல விசயங்களை சிரித்தபடி கடந்து விடுங்கள்.. ஒருவர் திட்டினாலோ, கேலி பண்ணினாலோ, தரக் குறைவாகப் பேசினாலோ இக்னோர் பண்ணி விடுங்கள்.. நியாயம் சொல்லவோ வாதிடவோ வேண்டாம்.. துரோகிகளாயினும் பேச்சை வளர்க்காமல் மன்னித்தபடி நகர்ந்திடோணும்.. அது நாம் கருணை வள்ளல் எனப் பெயரெடுக்கவோ, மகாத்மா ஆகவோ அல்ல.. நம் இதயத்தைப் பாதுகாப்பதற்கே என எண்ணுங்கோ.. அநாவசியமான வாதாட்டங்களினால், இதயம் பலவீனமாவது தவிர   எப்பயனும் வரப்போவதில்லை.

முக்கியமாக பேசித் தீர்க்க வேண்டிய, முக்கிய இடத்தில் மட்டும் நியாயம் பேசுங்கோ, மற்றும்படி புன்னகைத்தபடி நகர்ந்தால் நம் இதயத்தை நாம் பாதுகாக்கலாம்:).

எங்கள் குடும்ப பெண் ஒருவர், என்னை விட வயதில் குறைந்தவ, அவவிடம் பெரும்பாலும், ஆர்.. என்ன  குறை சொன்னாலும்.. திட்டினாலும்.. அவ ஒரு பெரிய சத்தமாக ஹா ஹா ஹா என சிரிப்பொன்று சிரிப்பா... அவ்வளவுதான்... அனைத்துக்கும் பதில் இருக்காது... ஒரு விதத்தில் அதுவும் நல்ல விசயம் என்றே நான் பலதடவை நினைப்பதுண்டு.

என்னைப்பொறுத்து “செய் அல்லது செத்துப்போ”, “செய்வன திருந்தச் செய்” என்பதை, மனதில் பதிய வைத்திருக்கிறேன், அதனால வாழ்ந்தால் முறையாக வாழோணும்.. இல்லை எனில் வாழ்க்கையே தேவையில்லை என எண்ணும் ரகம் நான்[ எதில் கால் வைத்தாலும் திறம்படச் செய்யோணும், இல்லை எனில் ஒதுங்கிடோணும்] அதனால மக்‌ஷிமம் எப்படி ஒரு நல்ல அம்மாவாக, மிக நல்ல மனைவியாக வாழ முடியுமோ அப்படித்தான் இதுவரை வாழ்ந்திருக்கிறேன், அதனால எனக்கு எப்பவும்.. என் முக்கிய கடமைகளில் இருந்து தவறி விட்டேனே என மரணத்தின் போது, என் மனதில் குறை வர வாய்ப்பில்லை:)).. ஹா ஹா ஹா:).

இதைப் படிச்சு இப்போ முக்கால் ஞானியாகி இருப்பீங்களே:).. ஆவ்வ்வ்வ் வெற்றீஈஈஈ வெற்றீஈஈஈஈஈ:))

ஊசிக் குறிப்பு:)

ஊசி இணைப்பு:)
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அஞ்சு... கையைக் கையை வச்சுக்கொண்டு கீழே நிக்கக்கூடாது:).. மேலே ஏறி நடக்கோணும் அதிராவைப்போல:))
()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()

Saturday 10 March 2018

வசந்த கால நதிகளிலே........................:)

அனைத்துப் பெண்களும் அன்னையரே.. அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.


இம்முறை பிரித்தானியாவில் 11ம் திகதி மார்ச் மாதம் - அன்னையர்தினம் கொண்டாடப்படுகிறது...

Tuesday 6 March 2018

என் போஸ்ட் படிச்சால்:) ஞானியாகி விடுவீங்கள்:)

காட்டில் முளைத்த மரமும் கவலைப்படும் காலம் -இலையுதிர்காலம்!!!
ற்று மணலும் கவலைப்படும் காலம் - கோடைக்காலம்!!!
விலங்குகள் கவலைப்படும் காலம் - அவை பயந்து நடுங்கும் காலம்!!!..
ஆனால்..

Thursday 1 March 2018

Radish/நோக்கிள்/முள்ளங்கி துவையல், இலங்கைப் பக்கோடா..

ன்னதான் ஆயிரம் இருந்தாலும்:) ஆயிரத்தில ஒண்டுதானே பெரிசு:).. அப்பூடித்தான், சமைக்கிறதை இங்கின போட்டுக் காட்டாவிட்டால் பாருங்கோ... ஒரு நிம்மதியான நித்திரையே வரமாட்டேன் என்கிறதே:)..